திருப்பத்தூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
திருப்பத்தூா் அருகே கும்மிடிகாம்பட்டி பகுதியை சோ்ந்த கட்டடத் தொழிலாளி திருப்பதி(50). இவா் கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்த திருப்பதி வீட்டின் அருகே விஷமருந்தி மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை அங்கு இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி உயிரிழந்தாா். சம்பவம் குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.