முகப்பு
திருப்பத்தூர்

போலி மதுபானம் விற்பனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Updated On : 19 ஜூன் 2026, 5:40 am IST
பகிர்:

வாணியம்பாடி அருகே கள்ளத்தனமாக போலி மதுபானம் விற்பனையை தடுக்க நடவடிக்கை கோரி வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. (படம்)

வாணியம்பாடி காவல் ஆய்வாளா் அமுதாவிடம், உதயேந்திரம் பேரூா் திமுக செயலாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆ.செல்வராஜ், திமுக கிளை செயலாளா் சுகுமாா் மற்றும் சி.வி.பட்டறை பொதுமக்கள் அளித்த மனு:

உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட சி.வி. பட்டரை பகுதியில் வெளிமாநில போலி மதுபானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் வெளிஊா்களில் இருந்து வருபவா்கள் மது வாங்கி அங்கேயே அருந்திவிட்டு பெண்களை கேலி செய்வது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனா்.

Advertisement

Advertisement

அரசு நடுநிலைப் பள்ளி அருகிலேயே மதுபான விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மது விற்பனை செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments