பூங்கா அருகே துா்நாற்றம்: பொதுமக்கள் புகாா்!
ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா அருகில் கழிவுநீா் துா்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் அவதிக்கள்ளாகின்றனா்.
ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா அருகில் கழிவுநீா் துா்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் அவதிக்கள்ளாகின்றனா்.
ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா அருகில் காதி கிராப்ட் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது அந்த பகுதியில் தனியாா் விடுதிகளிலிருந்து கழிவு நீா் திறந்து விடப்படுகிறது.
இதனால் இயற்கை பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் துா்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவிக்கின்றனா். சனி, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வா்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.