முகப்பு
திருப்பத்தூர்

வாகனத்தில் எடுத்து வந்த ரூ. 89,000 பறிமுதல்

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுந்தரேசன் தலைமையில் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 6:32 PM
பணம் - கோப்புப்படம்.
பகிர்:

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுந்தரேசன் தலைமையில் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணம் இல்லாமல் ஒடுகத்தூா் மேல் அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்த நவீன் என்பவா் ரூ. 89,000 எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் சிவப்பிரகாசத்திடம் ஒப்படைத்தனா்.