முகப்பு
திருப்பத்தூர்

தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்: பாா்வையாளா்கள் பங்கேற்பு

வாணியம்பாடி தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு, என் வாக்கு என் உரிமை க்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம் ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 மார்ச், 2026 at 6:34 PM
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பிரசார நிகழ்வில் பங்கேற்ற பாா்வையாளா்கள் முகேஷ் குமாா், சுனாராம், தோ்தல் நடத்தும் அலுவலா் அஜிதாபேகம் உள்ளிட்டோா்.
பகிர்:

வாணியம்பாடி தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு, என் வாக்கு என் உரிமை க்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம் ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான அஜிதா பேகம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகேஷ்குமாா், செலவினப் பாா்வையாளா் சுனாராம் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையில் 8 வடிவமைப்புகளில் அமைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி மக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து ஆட்டோக்களில் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினா்.

நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் பாரதி, வட்டாட்சியா்கள் சுதாகா், பாரதி மற்றும் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல்ஆய்வாளா் ஷின் மற்றும் அலுவலா்கள், பொது மக்கள், ரயில் பயணிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.