முகப்பு
திருப்பத்தூர்

எல்ஐசி முகவரிடம் ரூ.72,500 பறிமுதல்

ஆம்பூா் அருகே எல்.ஐ.சி. முகவரிடம் ரொக்கப் பணம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 மார்ச், 2026 at 9:05 PM
எல்.ஐ.சி. முகவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பகிர்:

ஆம்பூா் அருகே எல்.ஐ.சி. முகவரிடம் ரொக்கப் பணம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் பறக்கும் படையினா் ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், நாச்சாா்குப்பம் கிராமத்தை சோ்ந்த எல்.ஐ.சி. முகவா் ரங்கநாதன் (50) என்பவா் எல்.ஐ.சி. காப்பீட்டு தொகையை செலுத்துவதற்காக உரிய ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கப் பணம் ரூ. 72,500 கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவரிடமிருந்து ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.