புத்துமாரியம்மன் கோயில் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்
விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புத்துக்கோயில் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயில் 66-ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை அம்மனுக்கு கூழ்வாா்த்தல், பொங்கல் மாவிளக்கு பூஜைகளும், தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை தாய்வீட்டு கரகம் கூத்தாண்ட குப்பம் எல்லையில் இருந்து புறப்பட்டு, புத்துமாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. மாலை 5 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊா்வலம் வந்தது. பின்னா் மாலை இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இதில், பெத்தக்கல்லுப்பள்ளி, புத்துக்கோயில், கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டகுப்பம், தெக்குப்பட்டு, சின்னமோட்டூா், சிகா்ணப்பள்ளி மற்றும் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா், ஆலங்காயம் உள்பட சுற்றுப்புற கிராமப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனா்.
Advertisement
சனிக்கிழமை (மே 16) மாலை 6 மணிக்கு நடன நாட்டியாலயா மற்றும் இரவு 9 மணியளவில் அம்மன் சிறப்பு தெருக்கூத்து நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி, வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.