பண மதிப்பிழப்பு தினம்: மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு ஓராண்டு முடிந்ததை முன்னிட்டு நவ-8 ஆம் நாளை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது
திருவள்ளூர்பண மதிப்பிழப்பு தினம்: மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு ஓராண்டு முடிந்ததை முன்னிட்டு நவ-8 ஆம் நாளை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது
உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு ஓராண்டு முடிந்ததை முன்னிட்டு நவ-8 ஆம் நாளை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
திருவள்ளூர் பஜார் வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். இதில் நிர்வாகி சி.பி.மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆண்டு இதேநாளில் இரவு 8 மணிக்கு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். அதோடு வங்கி வரிசையில் நின்று பலர் உயிரிழந்தனர். இதை நினைவு கூறும் வகையில் அப்போது உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், ஜே.டி.அருள், ஜி.என்.பழனி , வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.