அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால்.. இறுதிக்குச் செல்லப் போவது யார்?
அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் இறுதிப் போட்டிக்குச் செல்லப் போவது யார்? என்பதைப் பற்றி...
இந்தியா - இங்கிலாந்து மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் யாருக்கு சாதகமாக அமையும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து மோதும் முதலாவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவிலும், இந்தியா - இங்கிலாந்து மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையில் நடைபெறவிருக்கிறது.
Advertisement
Advertisement
முதல் அரையிறுதி நாளை (மார்ச் 4) கொல்கத்தா ஈடன் கார்டன் திடலிலும், இரண்டாவது அரையிறுதி நாளை மறுநாள் (மார்ச் 5) மும்பை வான்கடே திடலிலும் நடைபெறவுள்ளது.
கோப்பையை வெல்லாத அணிகளான தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் முதல் அரையிறுதியிலும், மூன்றாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரையிறுதியிலும் மோதுகின்றன.
இந்த நிலையில், அரையிறுதிப் போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் சூழலில் எந்த முறையில் முடிவுகள் வெளியாகும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அரையிறுதிப் போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் அதற்கு அடுத்த நாள் மாற்று நாளாக (ரிசர்வ் டே) இருக்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அன்றைய நாளில் மழை பெய்தால் கூடுதலாக 90 நிமிடங்களும், வியாழக்கிழமை கூடுதலாக 120 நிமிடங்களும் வழங்கப்படும். இந்த அனைத்து நாள்களும் மழையால் ரத்தானால் வெள்ளிக்கிழமை 5 ஓவர்கள் கொண்ட போட்டி நடத்தப்படும்.
வெள்ளிக்கிழமையும் முற்றிலும் மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில், சூப்பர்-8 புள்ளிப்பட்டியலின்படி, மூன்று வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.
இரண்டு அரையிறுதிப் போட்டிகளிலும் இதே சூழல் நீடித்தால், இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 மற்றும் 2024 ஆம் ஆண்டில் ஐசிசி டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளே (2022 - இங்கிலாந்து, 2024 - இந்தியா) சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தன. அதனால், இந்தப் போட்டியிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
In that scenario, England will move to the final as they finished higher in their Super 8 group compared to India. England topped their group with 3 wins while India finished second with 2 wins
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.