திருவள்ளூர்

கைப்பந்து: மாநில அளவில் வென்ற மாணவர்களுக்குப் பாராட்டு

DIN

பள்ளி அளவில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வென்ற பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
 காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பாக்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கைப்பந்து அணி பங்கேற்றது. இப்போட்டியில் மாநில சாம்பியன்ஷிப் கோப்பையை இப்பள்ளி மாணவர்கள் வென்றனர்.
தொடர்ந்து மாணவர்கள் வியாழக்கிழமை பள்ளிக்கு திரும்பிய நிலையில், அவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.டி.வேலுமயில் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாணவர்கள் தாங்கள் வென்ற கோப்பை மற்றும் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் வழங்கி, வாழ்த்துப் பெற்றனர். 
பின்னர், வெற்றி பெற்ற பள்ளியின் கைப்பந்து அணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் ரூ. 5ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT