முதல்வர், துணை முதல்வர் பற்றி அவதூறு பரப்பியவர் கைது
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசி அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) விமர்சித்து பதிவு செய்து
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசி அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) விமர்சித்து பதிவு செய்து அனுப்பியவரை மப்பேடு போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் திங்கள்கிழமை கூறியதாவது:
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியப் பொறுப்பாளராக இருந்து வருபவர் ரமேஷ். அவருக்கு ஒரு நபர் கட்செவியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசி அப்பதிவை அனுப்பி வைத்தார். இது தொடர்பாக உடனே ரமேஷ் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மப்பேடு போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதோடு, இணையதளக் குற்றத்தடுப்பு (சைபர் கிரைம்) போலீஸாரின் உதவியுடன் அவதூறு பரப்பியவர் யார் என்று ஆய்வு செய்தனர். அப்போது, கொருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற ரமேஷ் என்பவரே இந்தச்செயலில் ஈடுபட்டார் என்பது தெரிய வந்தது. அவரை மப்பேடு போலீஸார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.