திருவள்ளூர்

தொழிலாளியைத் தாக்கி பைக், செல்லிடப்பேசி பறித்த 4 பேர் கைது

DIN


புழல் ஏரியில் மீன்பிடித்த தொழிலாளியைத் தாக்கி பைக், செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்து சென்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
செம்புலிவரம் அழகாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தனபால் (45). கட்டடத் தொழிலாளியான  இவரும், இவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, ரகு ஆகியோரும் செவ்வாய்க்கிழமை புழல் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் தனபாலை கத்தியால் வெட்டி, செல்லிடப்பேசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர். 
 இதுகுறித்த புகாரின் பேரில் புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சூரப்பேடைச் சேர்ந்த அஜீத் (20), கணேஷ் (20) மற்றும் புழல் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இருவர் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT