திருவள்ளூர்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

DIN


திருவள்ளூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் அருகே போளிவாக்கம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த செல்வியின் மகள் யமுனா (20). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முரளிக்கும் (25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 6 மாதங்களாக தாயார் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை  யமுனா வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது. 
இதையறிந்த செல்வி மற்றும் அக்கம் பக்கத்தினர் யமுனாவை மீட்டு,  சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு யமுனா சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மணவாளநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT