திருவள்ளூர்

சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில் லட்ச தீபம்

DIN

திருத்தணி: திருத்தணி சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில், காா்த்திகை மாத சோம வாரத்தையொட்டி, திங்கள்கிழமை லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தணி, பழைய தா்மராஜா தெருவில் உள்ள இக்கோயிலில், காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு கோயில் வளாகத்தில் லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT