திருவள்ளூர்

திருவள்ளூரில் 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

திருவள்ளூர் பகுதியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்காடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். 

DIN

திருவள்ளூர் பகுதியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்காடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். 
திருவள்ளூர் பகுதியில் தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவோரை கண்டறிய, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கவிகுமார் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது பஜார், குளக்கரை பகுதியில் உள்ள அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. உடனே அந்தக் கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் என 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் அவற்றை நகராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டு சென்று அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT