திருவள்ளூர்

பாஜக-வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN


கர்நாடகத்தில் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பில் பாஜக ஈடுபடுவதாகக் கூறி, அதைக் கண்டித்து திருவள்ளூரில் காங்கிரஸ்  கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் பிரமுகர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். கட்சியின் ஓபிசி பிரிவு மாநிலச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஏகாட்டூர் ஆனந்தன், வழக்குரைஞர் ஜான், அருள்மொழி, உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ.சி.சிதம்பரம் கலந்துகொண்டு பாஜக-வைக் கண்டித்து உரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT