திருவள்ளூர்

சாய் மந்திர் கோயிலில் குரு பௌர்ணமி பூஜை

DIN


குரு பௌர்ணமி உற்சவத்தையொட்டி, கே.ஜி.கண்டிகை சாய் மந்திரில் செவ்வாய்க்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 
திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகையில் உள்ள இக்கோயிலில் பாலாபிஷேகம், நவகிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர்,  ஸ்ரீ சத்யநாராயணா பூஜை நடைபெற்றது.  
 பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் பீரகுப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்  பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை கே.ஜி. கண்டிகை ஆந்திரா வங்கி கிளை மேலாளர் வெங்கடரமணா, துரைசாமிராஜ் ஆகியோர் வழங்கினர்.
கும்மிடிப்பூண்டியில்...
பெரியபாளையம் அருகே ராள்ளபாடி பகுதியில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
 இதேபோல் 82-பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள சாய்பாபா கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT