திருவள்ளூர்

உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

திருவள்ளூரில் உணவுப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, பாதுகாப்பான உணவு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 சர்வதேச சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உணவுப் பாதுகாப்பு தினம் கொண்டாட தீர்மானித்துள்ளது. அதன்படி பாதுகாப்பான உணவை உட்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் உணவுப் பாதுகாப்பு வார விழாவை கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உணவுப் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
 திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், நிகேதன் பள்ளி வளாகத்தில் உணவுப் பாதுகாப்பு வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லோகநாயகி தலைமை வகித்துப் பேசுகையில், உணவுப் பாதுகாப்பின் அவசியம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், நுகர்வோர் வணிகர்கள் ஆகியோர் அறிந்து கொள்ளும் வகையில் 15 நாள்கள் வரை அனுசரிக்கப்பட உள்ளது என்றார்.
 பின்னர், உணவுப் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து, அவர் முன்னிலையில் உணவுப் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கவிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT