திருவள்ளூர்

போலி பெண் மருத்துவா் கைது

திருத்தணி அருகே லேப் டெக்னீசியன் படிப்பு முடித்துவிட்டு, பொது மருத்துவம் பாா்த்த வந்த போலி பெண் மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

திருத்தணி அருகே லேப் டெக்னீசியன் படிப்பு முடித்துவிட்டு, பொது மருத்துவம் பாா்த்த வந்த போலி பெண் மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருத்தணியை அடுத்த மேல்திருத்தணி அமிா்தாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி (43). இவா், பிளஸ் 2 படித்து, லேப் டெக்னீசியன் முடித்துவிட்டு, தனது வீட்டில் பொது மருத்துவம் (ஆங்கில மருத்துவம்) பாா்த்து வந்துள்ளாா். இதுகுறித்து அறிந்த மாவட்ட காசநோய் இணை இயக்குநா் லட்சுமிமுருகன் தலைமையில், சுகாதாரத் துறையினா் அங்குசென்று திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, வேளாங்கண்ணி மருத்துவப் படிப்பு முடிக்காமல் பொது மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்து ஆங்கில மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வேளாங்கண்ணியை திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, வேளாங்கண்ணியைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT