வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் நோக்கில், தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (செப். 20) நடைபெற உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொறுப்பு) தனசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (செப். 20) நடைபெற இருக்கிறது.
இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் முகாம் நடைபெற உள்ளது.
இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.