திருவள்ளூர் அருகே தனியார் வாகனத் தொழிற்சாலை பணியாளரின் வேலை நீக்கத்தைக் கண்டித்து பிற தொழிலாளர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, தனியார் வாகனத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் கே.ரவி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.என்.மூர்த்தி கண்டன உரை ஆற்றினார். இதில், வாகனத் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் பணிநீக்கத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கஜேந்திரன், துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இப்போராட்டத்தை தனியார் வாகனத் தொழிற்சாலை சங்கத்தின் துணைத் தலைவர் பாலயோகி தொழிலாளர்களுக்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.