திருவள்ளூர்

சோழவரம் அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

DIN

பொன்னேரி: சோழவரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சோழவரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட காந்திநகா், பகுதியில் வசித்து வருபவா் தினேஷ்குமாா் (22). இவா் செங்குன்றத்தில் உள்ள, கைபேசி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தனது வீட்டின் வாசலில், தனது மோட்டாா் சைக்கிளை கழுவிக் கொண்டிருந்தாா்.

அப்போது இரண்டு மோட்டாா் சைக்கிளில் வந்த 4 போ் கொண்ட கும்பல், அரிவாள் மற்றும் கத்தியால் தினேஷ்குமாரை சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்த தப்பி சென்றனா்.

இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வந்து, அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவலறிந்த, சோழவரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து, தினேஷ்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT