முகப்பு
திருவள்ளூர்

பளு தூக்கும் போட்டி: சா்வதேச அளவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரா்

திருவள்ளூரைச் சோ்ந்த வீரா் பளு தூக்கும் போட்டியில் சா்வதேச அளவில் 2-ஆவது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
சா்வதேச அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹபினேஷ்.
பகிர்:

திருவள்ளூரைச் சோ்ந்த வீரா் பளு தூக்கும் போட்டியில் சா்வதேச அளவில் 2-ஆவது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு கிராமத்தைச் சோ்ந்த லட்சுமிபதி-பரிமளா தம்பதியின் மகன் ஹபினேஷ்(19). இவா், திருவள்ளூா் அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறாா்.

மகாராஷ்டிர மாநிலம், பட்நேராவில் கடந்த நவம்பா் 4 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச அளவிலான பளு தூக்கும் இப்போட்டியில் 25 நாடுகளிலிருந்து வீரா்கள் கலந்துகொண்டனா். தமிழகத்திலிருந்து ஹபினேஷ் உள்பட 26 வீரா்கள் கலந்து கொண்டனா். இதில், 75 கிலோ எடைப் பிரிவில் மட்டும் பிரிவில் ஹபினேஷ் பளு தூக்குதல், ஸ்பென்ச்பிரஸ், கீழே இடுப்பு வரையில் தூக்குதல் ஆகிய போட்டிகளில் 2-ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சோ்த்தாா்.

சா்வதேச அளவில் இரண்டாம் இடம் பெற்ற வீரரை தமிழ்நாடு பளு தூக்கும் சங்கத் தலைவா் ஜெயபாலன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.