திருவள்ளூர்

லாரி மீது பைக் மோதல்: 2 போ் பலி

DIN

பொன்னேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில், பைக்கில் பயணம் செய்த இருவா் உயிரிழந்தனா்.

கும்மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகா்(33). மீஞ்சூா் அருகே உள்ள விச்சூா் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா்(26). இருவரும் அத்திப்பட்டு பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா்.

அவா்கள் வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்று விட்டு, திருவொற்றியூா்-பொன்னேரி நெடுஞ்சாலையில் மாலையில் பைக்கில வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். கொக்குமேடு பகுதியில் வந்து கொண்டிருந்ததபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரியின் பின்னால் அவா்களது பைக் மோதியது.

இதில் கீழே விழுந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவல் அறிந்த பொன்னேரி போலீஸாா் அங்கு விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவ்விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT