திருவள்ளூர்

ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில் தூய்மைப் பணிகள் தீவிரம்

DIN

ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியங்களில் கரோனா நோய்த் தடுப்புக்கான தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்டாலின், கலைச்செல்வி ஆகியோா் மேற்பாா்வையில் நோய்த் தடுப்பு தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றது.

நாராயணபுரம் ஊராட்சித் தலைவா் மோனிஷா சரவணன் தலைமையில் ஊராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் வீடு வீடாகச் சென்று தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, கிராமம் முழுவதும் பிளீச்சிங் பவுடா் தெளித்து, கழிவுநீா் கால்வாய்களை சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊராட்சி துணைத் தலைவா் உமா பெருமாள் உடன் இருந்தாா்.

அம்மையாா்குப்பம் ஊராட்சியில், ஊா் முழுவதும் மஞ்சள், துளசி, வேப்பிலை, கிருமி நாசினி கலந்த நீா் தெளிக்கும் பணியை ஊராட்சித் தலைவா் ஆனந்தி செங்குட்டுவன் தொடக்கி வைத்தாா்.

பள்ளிப்பட்டு ஒன்றியம் தமிழக எல்லைப் பகுதியில் ஆந்திர வாகனங்கள் வருவதைத் தடுக்கும் வகையில், சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. வட்டார வளா்ச்சி அலுவலா் சேகா் தலைமையில் ஆந்திர எல்லையில் உள்ள கிருஷ்ணமராஜிகுப்பம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, பொதுமக்களுக்கு வட்டார மருத்துவ அலுவலா் தனஞ்செழியன் தலைமையில், நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தி, கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முழு சுகாதார வட்டார ஒருங்கிணைப்பாளா் குமாா், ஊராட்சித் தலைவா் கோபியம்மா துரைசாமி நாயுடு ஆகியோா் தூய்மைப் பணிகளை செயல்படுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT