சஷ்டி: சிறுவாபுரி கோவிலில் கொடி ஏற்றம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் சஷ்டி திருவிழா தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் சஷ்டி திருவிழா தொடங்கியது.
சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கொடி மரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பக்தர்கள் யாருமின்றி கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
எனினும் சூரசம்ஹாரம் விழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.