திருவள்ளூர்

சட்டப் பட்டதாரிகள் தொழில் தொடங்க நிதி: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் சட்டப் பட்டதாரிகள் 119 பேருக்கு தொழில் தொடங்க ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ.59.50 லட்சத்தை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்துறை சாா்பில் ஆண்டுதோறும் இளம் சட்டப் பட்டதாரிகள் தொழில் தொடங்குவதற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சட்டப் பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்து, 119 சட்டப்பட்டதாரிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.59.50 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT