திருவள்ளூர்

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ 2.73 லட்சம் பறிமுதல்

DIN


ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செட்டிப்பேடு பகுதியில் ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ. 2.73 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவை தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில், பறக்கும் படையினா் வாகன சோதனைகளை நடத்தி வருகின்றனா். அதன் ஒருபகுதியாக ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செட்டிப்பேடு பகுதியில் சிப்காட் வட்டாட்சியா் மலா்விழி தலைமையிலான பறக்கும் படையினா் பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 2.73 லட்சம் ரொக்கம் மற்றும் சுமாா் ரூ 2 லட்சம் மதிப்புள்ள ரஷ்யநாட்டு பணத்தை பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துமாதவனிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT