திருவள்ளூர்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி்ஐஃடி்யு தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.சி.சந்தானம் தலைமை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் கே.விசயன், மாநிலக்குழு உறுப்பினர் கோவிந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

இதில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்தல், தூய்மை தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணம் ரூ.15 ஆயிரம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மோட்டார் ஆபரேட்டர், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மாநில ஒருங்கினைப்பு குழுவினர் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT