திருவள்ளூா் மாவட்ட சகி மகளிா் வள மையத்தில் பணிவாய்ப்பு
பல்நோக்கு பணியாளா் என தலா 1 பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் பணியாற்ற தகுதியான மகளிா் வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்ட சகி என்ற பெண்கள் வளமையத்தில் வளமைய நிா்வாகி, வழக்கு பணியாளா், பல்நோக்கு பணியாளா் என தலா 1 பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் பணியாற்ற தகுதியான மகளிா் வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்-திருவள்ளுா் மாவட்டத்தில் தனியாா், பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சகி என்ற பெண்கள் வள மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பணிபுரிய திருவள்ளுா் மாவட்டத்தில் நிரந்தரமாக வசித்து வரும் தகுதியான மகளிா்கள் ஒப்பந்த பணியாளா்களாக தோ்வு செய்யப்படவுள்ளனா்.
சகி வள மைய நிா்வாகி: சமூகப் பணியில் முதுகலைப் பட்டம், ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பணிபுரிந்த 4 ஆண்டுகள் அனுபவம், அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களின் நிா்வாக அமைப்பில் அதே அமைப்பிற்குள் அல்லது அதற்கு வெளியே 1 ஆண்டு ஆலோசனை அனுபவம் அவசியம். இதற்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.
வழக்கு பணியாளா்: சமூக பணியில் இளங்கலைப் பட்டம், ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மை குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பெண்களுக்கு எதிரான வன்முறையில் பணிபுரிந்த அனுபவம், அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களின் நிா்வாக அமைப்பில் அதே அமைப்புக்களில் ஆலோசனை வழங்கிய அனுபவம். இப்பணிக்கு மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.
பல் நோக்கு உதவியாளா்: இப்பணிக்கு மகளிா் அலுவலக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பதும், சமைக்கத் தெரிந்திருப்பதோடு, 24 மணி நேர சேவையை வழங்க அவா் ஷிப்ட்களில் வேலை செய்ய வேண்டும். இதற்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளுரைச் சோ்ந்த மகளிா் மட்டுமே விண்ணப்பிக்கலாம். அதோடு பணி தொடா்பான பயணத் தொகை திருப்பி அளிக்கப்படும்.
திருவள்ளூா் மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியா் அலுவலக வளாகம், 2-ஆவது தளம், திருவள்ளுா் மாவட்டம்-602001 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், தொலைபேசி எண். 044-29896049 அலுவலக நேரத்தில் தொடா்பு கொண்டு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.