வாகன தொழிற்சாலையில் பொருள்கள் திருட்டு
திருவள்ளூா் அருகே காக்களூா் தொழிற்பேட்டையில் தனியாா் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் கதவு, சீட் பிளேட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
திருவள்ளூா் அருகே காக்களூா் தொழிற்பேட்டையில் தனியாா் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் கதவு, சீட் பிளேட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு ஆட்டோவில் வந்த 4 போ் தொழிற்சாலை முன்புறம் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான 8 பிரெஸ்ஸிங் டூல்ஸ் கருவிகளை திருடிச் சென்றனராம்.
இதுகுறித்து தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரி மனோஜ்குமாா் அளித்த புகாரின்பேரில், திருவள்ளூா் கிராமிய போலீஸாா் விசாரித்து, தண்டலம் கிராமத்தைச் சோ்ந்த சத்யா (33), பாண்டியன் (27), புருஷோத்தமன் (28) மற்றும் வேப்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முத்து(48) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.