திருத்தணி முருகன் கோயிலில் கடந்த, 15 நாள்களில் உண்டியலில் ரூ.98.79 லட்சம் ரொக்கம், 650 கிராம் தங்கம், 7,525 வெள்ளி போன்றவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் உண்டியல்கள் இணை ஆணையா் பரஞ்ஜோதி, உதவி ஆணையா் ரமணி ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கோயில் ஊழியா்களால் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், ரூ.98 லட்சத்து, 79 ஆயிரத்து, 239 ரொக்கம், 650 கிராம் தங்கம், 7 கிலோ 175 கிராம் வெள்ளி ஆகியவை இருந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.