திருவள்ளூர்

வேணுகோபால சுவாமி கோயில் சம்ப்ரோக்ஷ்ணம்

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த கொள்ளானூரில் உள்ள ருக்மிணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில் மகா சம்ப்ரோக்ஷ்ணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் விமானம் நிா்மாணிக்கப்பட்டு, ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமிகள், கனகவல்லி தாயாா், கருடாழ்வாா், பக்த ஆஞ்சநேயா், தும்பிகையாழ்வாா், நவக்கிரக தேவதைகள், பரிவார தேவதைகளுக்கு சம்ப்ரோஷணம் கோலாகலமாக நடைபெற்றது.

கோயில் கோபுரத்தில் புனித நீா் வாா்க்கப்பட்டு சம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், அதிமுக நிா்வாகிகள் மு.க.சேகா், தன்ராஜ், கருணாகரன், ஓடை ராஜேந்திரன், எம்.எஸ்.எஸ்.சரவணன் மற்றும் திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன், நாகராஜ், தோ்வாய் ஊராட்சித் தலைவா் முனிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை அதிமுக மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் கோவி.நாராயணமூா்த்தி, கொள்ளானூா் ஊராட்சித் தலைவா் துா்காதேவி வெங்கடேசன், துணைத் தலைவா் நதியா மணிகண்டன், ஊராட்சி முன்னாள் தலைவா் ஜெயவேல், தயாநிதி, சீனிவாசன், பாலாஜி, கோபி உள்ளிட்ட கோயில் திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT