திருவள்ளூர்

செங்குன்றம் பேருந்து நிலைய மேற்கூரை அமைக்க பூமி பூஜை

DIN

சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் பேருந்து நிலைய வளாகத்தில் மேற்கூரை அமைப்பதற்கான பூமி பூஜை சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். சுதர்சனம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
செங்குன்றம் பேருந்து நிலைய வளாகத்தில் மேற்கூரை இல்லாமல் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வந்தது. இதையடுத்து பயணிகளும் பொதுமக்களும் வெயில் மற்றும் மழை காலங்களில் மிகவும் அவதிப்பட்டனர். இதுதொடர்பாக பொதுமக்கள் மேற்கூரை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். 
இந்த நிலையில், சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேற்கூரை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதில் செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜி ராஜேந்திரன் முன்னாள் துணைத் தலைவர்கள் ஆர் இ ஆர் விப்ர நாராயணன், இரா.ஏ.பாபு, மற்றும் கழக நிர்வாகிகள் திராவிடமணி, ரகு குமார், அருள் தேவநேசன் முனீஸ்வரி சுகுமார், சந்திரசேகர், கோபால், சுந்தரம் கபிலன், லெனின் குமார், பேரூராட்சி செயலர் பாஸ்கரன், துப்புரவு உதவி ஆய்வாளர் மதியழகன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT