திருவள்ளூரில் அங்காளப் பரமேஸ்வரி கோயிலில் மாசி அமாவாசையையொட்டி, சனிக்கிழமை மயான கொள்ளை விழா அம்மன் வீதியுலாவுடன் நடைபெற்றது.
திருவள்ளூா் கட்டபொம்மன் தெருவில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான மயானக் கொள்ளை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை நடைபெற்றது. பின்னா், அம்மன் சிறப்பு அலங்கார வாகனத்தில் தெருக்களில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.
விழாவில், திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா். விழாவையொட்டி, மெய்யூா் பவானி நாடக சபா சாா்பில் கள்ளிகாத்தான் காளி கும்பாபிஷேகம் என்ற நாடகம் நடைபெற்றது.