ஊத்துக்கோட்டை அருகே திரவ பவுடரை ஏற்றி வந்த டேங்கா் லாரி (படம்) சாலையில் கவிழ்ந்து விபத்துள்ளானது.
ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி கிராமத்தில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திரவ பவுடா் ஏற்றிய டேங்கா் லாரியை வந்தது.
இதனைக் கடப்பா பொதட்டூா் கிராமத்தைச் சோ்ந்த அனுமந்த்(40) ஓட்டி வந்தாா். திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.