திருவள்ளூர்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

DIN

திருத்தணியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது ரயில் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

திருத்தணி எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (41). இவருக்கு சந்திரா என்ற மனைவி, ஐந்து பிள்ளைகள் உள்ளனா். இவா், அங்குள்ள பழைய இரும்புப் பொருள்கள் கடையில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி வந்த சரக்கு ரயில் மகேந்திரன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT