புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருவனந்தபுரத்தில் தன்னாட்சி ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வரும் தேசிய புவி அறிவியல் மையத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் குறித்து...
இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் திருவனந்தபுரத்தில் தன்னாட்சி ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வரும் தேசிய புவி அறிவியல் மையத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். NCESS/P&GA/1224/01/2026
பணி: Scientist-B
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 2
தகுதி: Geology பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scentist -B
காலியிடங்கள்: 1
தகுதி: Geophysics பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 38-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientist D
காலியிடங்கள்: 1
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Geology,Marine Geology பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு 7-ஆவது ஊதியக்குழு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கொடுக்கப்பட்டுள்ள தகுதியுடன் Petrology, Sesmological Science போன்ற ஏதாவதொரு பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அல்லது படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ncess.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.3.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
NCESS invites online applications for regular positions from prospective, interested and eligible candidates....
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.