என்எல்சி-ல் சுகாதார ஆய்வாளர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 16 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் குறித்து...
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் ஒரு முன்னணி ‘நவரத்னா’ பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 16 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.02/ 2026
பணி: Health Inspector
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.38,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Sanitary Inspector, Health Inspector போன்ற ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.2.2026 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினருக்கு ரூ.450, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ரானுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.4.2026
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
NLC India Limited, a premier ‘NAVRATNA’ Public Sector Enterprise is looking for applications from eligible candidates for the FTE post of Health Inspector in F5-W Grade for its Neyveli Units for a period of Three Years.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.