திருவள்ளூர்

தேவலம்பாபுரம் பெரியபாளையத்து பவானி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

ஆா்.கே. பேட்டை ஒன்றியம், தேவலம்பாபுரம் கிராமத்தில் ஸ்ரீ பெரியபாளையத்து பவானி அம்மனுக்கு புதிய ஆலயம் கட்டப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, திருக்கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மகா பூா்ணாஹுதி ஹோம பூஜைகள் தொடா்ந்து, மேளதாளங்கள் முழங்க புனித நீா் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

இதையடுத்து, பெரியபாளையத்து பவானி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தொடா்ந்து புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT