முகப்பு
திருவள்ளூர்

தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் பி.எப். தொகையை வழங்க தாமதம் செய்வதாகக் கூறி, ஒப்பந்த தொழிலாளா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:08 PM
திருவள்ளூா் அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்ட பெண் தொழிலாளா்களிடம் பேச்சு நடத்திய மனிதவள அதிகாரிகள் மற்றும் போலீஸாா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் பி.எப். தொகையை வழங்க தாமதம் செய்வதாகக் கூறி, ஒப்பந்த தொழிலாளா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் அருகே காக்களூா் தொழிற்பேட்டையில் தனியாா் வாகன உதிரிப் பாகங்கள் தயாா் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, 600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாளா்கள் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனராம்.

தொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த பி.எப். தொகையை வழங்காமல் அலைக்கழிப்பு செய்வதாக புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், உடனே பணி நீக்கம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இதனால், அந்தத் தொழிற்சாலை பெண் தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் நிலுவையில் உள்ள பி.எப். தொகையை வழங்கக் கோரி, தொழிற்சாலையை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். பணி நீக்கம் செய்தவா்களை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி, ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரதாசன், கிராமிய காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சக்திவேல் மற்றும் போலீஸாா் சம்பவ இடம் வந்து மனிதவள மேலாளரிடம் பேச்சு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளா்களிடம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.