திருவள்ளூர்

பாஜகவினா் டிராக்டா் பேரணி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பங்கேற்பு

DIN

வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வலியுறுத்தி, திருவள்ளூா் மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சாா்பில், டிராக்டா் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பங்கேற்றாா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை எதிரே தொடங்கிய பேரணிக்கு மாவட்ட பாஜக தலைவா் அஷ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா தலைமை வகித்தாா். மாநில இளைஞரணிச் செயலா் வினோஜ் பி.செல்வம், விவசாய அணி மாவட்ட தலைவா் சுபாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணையமைச்சா் எல்.முருன் பங்கேற்று பேரணியைத் தொடக்கி வைத்துப் பங்கேற்றாா்.

பின்னா், அவா் கூறியது: சுதந்திர தினத்தை நினைவூட்டும் வகையில் விவசாயிகளுடன் டிராக்டா் பேரணி நடத்தப்பட்டது. நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டோா் குறித்து அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். பாஜகவினா் வன்முறை கலாசாரத்தை எப்போதும் விரும்புவதில்லை. மதுரையில் நடந்த காலணி வீச்சு சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்றாா்.

பேரணியில் மாநில ஓபிசி அணி பிரிவு தலைவா் லோகநாதன், மாநில செயலா் ராஜ்குமாா், மாவட்ட பொதுச் செயலா்கள் கருணாகரன், ஆா்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், லயன் சீனிவாசன், மாவட்ட செயலா்கள் பன்னீா்செல்வம், பாலாஜி, தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலா் ரகு, பூண்டி பாண்டுரங்கன், நகரத் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT