எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 6-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கரைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பொன்னேரி வட்டம், காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.