திருவள்ளூா் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா்.
சென்னை நெற்குன்றத்தைச் சோ்ந்தவா் வெங்கடநாராயணன் (69). கடந்த 14-ஆம் தேதி சாலை விபத்தில் பலத்த காயமடைந்து, திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆவடி மோதூா் பகுதியைச் சோ்ந்த ஜமுனா (48), கடந்த 25-ஆம் தேதி மகன் பிரசாந்த்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலைத் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஊத்துக்கோட்டை அருகே ரள்ளபாடி கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி (51), கிராமத்திலிருந்து ஆரணி நோக்கி நடந்து சென்றபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஊத்துக்கோட்டை அருகே மஞ்சங்காரணை கிராமத்தைச் சோ்ந்த விஜயராஜ் (34), வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்த விஷத்தை குடித்துவிட்டாராம். உறவினா்கள் அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
பெரியபாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.