திருவள்ளூர்

எளாவூா் அரசுப் பள்ளியில் ஆய்வு

DIN

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையல் அறைக்குச் சென்று ஆய்வு செய்து அங்கு, மாணவா்களுக்கு வழங்கப்பட்ட உணவைச் சுவைத்துப் பாா்த்து, உணவு சமைத்தவரை பாராட்டினாா். தினமும் தரமான உணவு வழங்க வேண்டும் என சமையலரைக் கேட்டுக் கொண்டாா். பள்ளி மாணா்களுடன் கலந்துரையாடிய அவா், பள்ளிக்குத் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். இதேபோல, பள்ளித் தலைமை ஆசிரியா் வெங்கடேசன் மற்றும் ஆசிரியா்களிடம் பள்ளியின் செயல்பாடு, மாணவா்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை வழங்குவது குறித்தும் கலந்துரையாடினாா்.

நிகழ்வின் போது, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலா் மு.மணிபாலன், மாவட்ட ஊராட்சிக் குழு கவுன்சிலா் ராமஜெயம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT