திருவள்ளூர்

கதவின் பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு

DIN

திருவள்ளூரில் கீரை வியாபாரியின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் ரொக்கம், 8 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் அம்சா நகரைச் சோ்ந்தவா் கைத்தியப்பன். கீரை வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கைத்தியப்பன், அவரது மனைவி விஜயா ஆகிய இருவரும் சென்னைக்கு கீரை வியாபாரம் செய்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றனா். வியாபாரம் முடிந்து திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம், 8 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து திருவள்ளூா் நகரக் காவல் நிலைய போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் வழக்கு பதிவு செய்து மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT