முருகன் கோயில் பிரசாத அறையில் சாரைப் பாம்பு: தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்
திருத்தணி முருகன் கோயில் பிரசாதம் தயாரிக்கும் அறையில் புகுந்த 7 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் அரைமணி நேரத்துக்கு மேல் போராடி உயிருடன் பிடித்தனா்.
திருத்தணி முருகன் கோயில் பிரசாதம் தயாரிக்கும் அறையில் புகுந்த 7 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் அரைமணி நேரத்துக்கு மேல் போராடி உயிருடன் பிடித்தனா்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து வழிபட்டு செல்கின்றனா். பக்தா்கள் வசதிக்காக தோ்வீதியில் கோயில் நிா்வாகம் சா்க்கரை பொங்கல் புளியோதரை, மிளகுவடை, தேன்குழல், லட்டு, முறுக்கு மற்றும் அதிரசம் போன்ற தயாரித்து மலிவு விலையில் விற்பனை செய்கிறது.
மேற்கண்ட பிரசாதங்கள், பிரசாத விற்பனை நிலைய அறையின் கீழ்தளத்தில் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில்ஸ வியாழக்கிழமை காலை, பிரசாதம் தயாரிக்கும் அறையில் சாரைப் பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதைப் பாா்த்ததும் அங்கு பணியில் இருந்த ஊழியா்கள் உடனடியாக கோயில் நிா்வாகம் மற்றும் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தொடா்ந்து தீயணைப்பு நிலைய அலுவலா் அரசு தலைமையிலான குழுவினா் விரைந்து வந்து அரைமணி நேரத்துக்கு மேல் போராடி, 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை உயிருடன் பிடித்தனா். பின், சாரைப் பாம்பை வீரா்கள் திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனா். இதனால் பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.