திருவள்ளூர்

6 டன் ரேஷன் பறிமுதல்: 3 போ் கைது

DIN

செங்குன்றம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் சுங்கச்சாவடி திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளா் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, செங்குன்றம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்ற 2 சிறிய சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்திய முகமது காஜா மைதீன், யாகூப் ஷெரீப், நூா் ஆலம் ஆகிய 3 பேரைக் கைது செய்து, 6 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனங்களுடன் பறிமுதல் செய்து, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!

இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்

4-ம் கட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

இன்று நாலாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: சென்னையில் 99.30% தேர்ச்சி

SCROLL FOR NEXT