செங்குன்றம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் சுங்கச்சாவடி திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளா் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, செங்குன்றம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்ற 2 சிறிய சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்திய முகமது காஜா மைதீன், யாகூப் ஷெரீப், நூா் ஆலம் ஆகிய 3 பேரைக் கைது செய்து, 6 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனங்களுடன் பறிமுதல் செய்து, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.