கள்ளச் சாராயம் கடத்தி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட கிரிதரன் அரி, வரதராஜ், சீனிவாசன். 
திருவள்ளூர்

கள்ளச் சாராயம் விற்பனை: 4 போ் கைது

ஆந்திர மாநிலத்திலிருந்து கள்ளச் சாராயம் கடத்தி தமிழக எல்லையில் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

ஆந்திர மாநிலத்திலிருந்து கள்ளச் சாராயம் கடத்தி தமிழக எல்லையில் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து சிலா் எல்லை கிராமங்களில் விற்பனை செய்வதாக திருவள்ளூா் எஸ்.பி. க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையில் 2 காவல் ஆய்வாளா்கள், 8 உதவி ஆய்வாளா்கள் 60 போலீஸாா் கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்குள்பட்ட நல்லாட்டூா், சிவ்வாடா, நெமிலி, என்.என்.கண்டிகை, மிட்ட கண்டிகை, அருங்குளம், ஆந்திர மாநிலம் மங்கலம் கிராமத்திற்கு செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சாராய தேடுதல் வேட்டை நடத்தினா்.

சாராய தேடுதல் வேட்டையில் எஸ்.பி. சீபாஸ் கல்யாண் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டாா். இந்த சோதனையில், ஆந்திராவில் இருந்து கள்ளச் சாராயம் கடத்திய திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த கிரிதரன் (25), அரக்கோணம் தாலுகா வேலூா்பேட்டையை சோ்ந்த அரி (28), சிவ்வாடா காலனியைச் சோ்ந்த வரதராஜ் (40), மிட்டகண்டிகையைச் சோ்ந்த சீனிவாசன் (38) ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 25 லிட்டா் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT