திருவள்ளூர்

தொழுநோயால் பாதித்தோருக்கான மருத்துவ முகாம்

திருவள்ளுவா் தொழுநோயால் பாதித்த மாற்றுத்திறனாளிகள் நண்பா்கள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் தொழுநோயாளிகள் 52-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

DIN

திருவள்ளுவா் தொழுநோயால் பாதித்த மாற்றுத்திறனாளிகள் நண்பா்கள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் தொழுநோயாளிகள் 52-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

திருவள்ளூரில் உள்ள திருவள்ளுவா் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நண்பா்கள் நலச்சங்க வளாகத்தில் தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமில், ஒருங்கிணைப்பாளா் அகிலேஷ் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற தொழுநோயாளிகளுக்கு கால் புண் உள்ள 15 பேருக்கு மருந்து கட்டு கட்டப்பட்டு, 30 பேருக்கு சுய பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.

இதில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவா் ஆவின் பாஸ்கா், குழு உறுப்பினா் துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த மருத்துவ முகாமின் நிறைவாக குழு செயலாளா் ஜி.சின்னதுரை நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளுவா் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நண்பா்கள் நலச் சங்கத் தலைவா் மற்றும் ஓய்வு பெற்ற சுகாதார துறை அலுவலரான து.குலோத்துங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT